அன்று சனிக்கிழமை.நாகர்கோவில் அருகே உள்ள பறக்கிங்கால் சென்றிருந்தேன். சுமார் 23 குழந்தைகள் பள்ளிச் செல்லா குழந்தைகள் அந்த தெருவில் இருந்தனர். குழந்தைகளிடம் பேசினேன்.
அவர்கள் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. ஆசிரியர் என்ற வார்த்தையை கேட்டாலே பயப்படுகின்றனர். வகுப்பில் நடத்தும் பாடம் மனதில் பதியவில்லை எங்கிறார்கள். பெற்றோர்களிடம் பேசினேன். ஓரு சில பெற்றோர்களை தவிர மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயாராக இருந்தனர்.அந்த தெருவில் பெரும்பாலான பெற்றோர்கள் பிச்சை எடுக்கும் தொழிலையும், திருடும் தொழிலையும் செய்து வருகின்றனர். சுமார் 10 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
